திருவெண்ணெய்நல்லூர், செப். 25- இரண்டு கிராமத்தின் கிரிக்கெட் விளை யாடும் இளைஞர்களுக்குள் டாஸ் போடுவ தில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி தலித்பகுதி இளைஞர்கள் தாக்கப்பட்டனர். இருதரப்பிலும் பலர் கைது செய்யப் பட்டுள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் அரும்பட்டு கிராமம் மற்றும் கீரிமேடு ஊராட்சிக்குட்பட்ட மணல்மேடு ஆகிய கிராம இளைஞர் கள் தொடர்ந்து கிரிக்கெட் போட்டி நடத்தி வருபவர்கள். மணல்மேடு கிராமத்தில் ஏரியில் அமைந்துள்ள கிரிக்கெட் திடலில் ஞாயிறன்று பிற்பகல் அரும்பட்டு கிரா மத்தைச் சேர்ந்த ஒரு பகுதி இளைஞர்கள் குழுவும், மணல்மேடு தலித் பகுதி இளை ஞர்கள் குழுவும், அருகேயுள்ள மாமந்தூர் கிராம இளைஞர்கள் குழுவும் கிரிக்கெட் விளையாட ஒன்று கூடியுள்ளனர். அப்போது அரும்பட்டு குழுவைச் சேர்ந்த வர்கள் மணல்மேடு குழுவினர் இல்லாமல் டாஸ் போட்டுள்ளனர். இதனை மணல்மேடு கிராம தலித் இளைஞர்கள் குழு தட்டி கேட்டதால் அரும்பட்டு, மணல்மேடு குழுக்களிடையே தகராறு ஏற்பட்டு மோத லாக மாறியுள்ளது. இதில் ராமமூர்த்தி, நீலா ஆகியோரின் மகன் ராமதாஸ் (24) கடுமை யாக தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தகராறு நீடித்ததால் திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் விரைந்து வந்து இரு பகுதியிலும் தலா எட்டு பேர் என வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்தனர். மேலும் தலித் பகுதியில் காயமடைந்த நான்கு இளை ஞர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச் சம்பவத்தை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, ஒன்றியச் செயலா ளர் எஸ்.மணிகண்டன், மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணல்மேடு தலித் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அரும்பட்டு கிரா மத்திற்கு சென்று சம்பவம் தொடர்பாக விசா ரித்து அறிந்தனர். இரு பகுதி சமூக பெரிய வர்களும் அமைதியை விரும்புவதால் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை யினர் இப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை வலியுறுத்தி யுள்ளார்.