விழுப்புரம், மே 23- விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே பொய்கை அரசூர் கிராமத்தில் வெள்ளி யன்று (மே 22) சாலையில் விற்ற பிரட் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சாப்பிட்ட இனியவன் (4), மதிராஜ் (3), முகுந்தன் (2), ஜீவா (6), தர்ஷன் (2), சாமுவேல் (3), பிரதீப் (5), குணவர்ஷினி (3), பர்வீன் (4), காவியா, பிரியதர்ஷினி (7), சந்துரு (2), தாஸ் (16), நிஷாந்த் (4), தமிழரசன் (6) ஆகிய 15 குழந்தை களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனை அவசர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் தரமான உயரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.