tamilnadu

img

100 நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

திருவெண்ணைநல்லூர், நவ.23-  நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் உள்ள 100 நாள் வேலையை அமலா க்கக் கோரியும், சட்டக்கூலி வழங்கக் வலியுறுத்தியும் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் டி.புதுப்பாளையம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மெயின்ரோட்டிலிருந்து டி.புதுப்பாளையம் செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும், அரசு நடுநிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி வளாகங்களை சுகாதாரக் கேடு இல்லாமல் பராமரித்து கொசுத் தொல்லையை போக்கிட வேண்டும். குளத்தங்கரையில் உள்ள பொதுக்கழிப்பறை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், தலித் மக்களுக்கான சுடு காட்டுப் பாதையை சீர மைத்து சிமெண்ட் சாலை யாக அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும், அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். சிபிஎம் கிளைச் செய லாளர் கே.ராமு தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் டி.எம்.ஜெய்சங்கர், ஒன்றியச் செய லாளர் எஸ்.மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கே.சிவக்குமார், எஸ்.குமார், ஆர்.வீரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். ஆர்ப்பாட்டம் நடை பெறுவதற்கு முன்னதாக தலித் மக்களுக்கான சுடு காட்டு பாதையில் இருந்த முட்புதர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற ப்பட்டன.

;