tamilnadu

img

ரயில் பயணத்தில் காவலன் செயலியை பயன்படுத்தலாம்

சென்னை,ஜன. 1-  ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு காவலன் செயலியை பயன்படுத்தும்படி தமிழக இருப்புப்பாதை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இருப்புப்பாதை காவல்துறை ஆற்றிய சேவைகளை விளக்கி வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், உதவி மைய எண் 1512 மற்  றும் தொலைதொடர்பு எண் 9962500500 ஆகியவை பயணிகளுக்கு தெரியும் வண்ணம் அனைத்து ரயில் நிலையங்  களிலும் ரயில்களிலும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த உதவி எண்களை பயன்படுத்தி  ரயில்நிலையங்களில் நடைபெறும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் புகார்  அளிக்க இருப்புப்பாதை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

;