இந்தாண்டே மாணவர் சேர்க்கையை தொடங்க சு.வெங்கேடசன் எம்.பி. வலியுறுத்தல்
மதுரை, ஜூலை 25- மதுரை இடையபட்டியில் அமைந்துள்ள இந்தோ-திபெத்திய எல்லைக் காவ லர்படை வளாகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா தொடங் கப்பட உள்ளது என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள் ளார். இது குறித்து சு.வெங்கடேசன் வெளி யிட்டுள்ள செய்தி வருமாறு: மதுரைக்கு மற்றுமொரு கேந்திரிய வித்யாலயா வேண்டுமென்ற கோரிக்கை யை ஏற்று இடையபட்டி இந்தோ-திபெத் திய எல்லைக் காவலர்படை வளாகத்தில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அனுமதி கிடைக்கப் பெற்றாலும் பள்ளியைத் தொடங்குவதற்கான நடைமுறைகள் கால தாமதப்பட்டே வந்தன. மக்களவை உறுப்பி னராகப் பொறுப்பேற்றவுடன் இப்புதிய பள்ளி தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களைக் கேட்டறிந்தேன்.
குறிப்பாக, இந்தோ-திபெத்திய எல்லைக் காவலர்படை வளாகத்தில் நிலத்தைப் பள்ளிக்கு வழங்குவதில் கால தாமதம் இருப்பதை அறிந் தேன். நிலத்தைத்தர ஒப்புதல் தர வேண்டிய உள்துறை அமைச்சகம் உள்ளிட்டவர் களை அணுகி அந்நிலத்தை விரைந்துதரும்படி கேட்டுக்கொண்டேன். மக்களவை உறுப்பினர் மற்றும் மனிதவள மேம்பாட்டு நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து நேரடியாகவும் எழுத்துப்பூர்வ மாகவும் வலியுறுத்தி வந்தேன். தற்போது பள்ளிக்கான நிலம் ஒப்படைக்கப்பட்டி ருக்கிறது. இந்த நிலையில் புதிய மாண வர் சேர்க்கையை காலதாமதப்படுத்தா மல் இந்தாண்டே தொடங்குவது மக்க ளுக்குப் பயன்தரும். குறிப்பாக நோய் தொற்றுப் பரவல் காலத்தில் அருகில் மத்திய அரசின் பள்ளி ஒன்று அமை வது மாணவர்களுக்குப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் அமையும் என்பதால், உட னடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வலியுறுத்தி மத்தியக் கல்வி அமைச்சருக் கும் கேந்திர வித்தியாலயா ஆணையருக் கும் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.