கோவை, ஜூலை 25- கோவையில் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாணவர்களை விரட்டியடித்து, மாணவர் சங்க மாவட்ட தலைவரை தர தரவென இழுத்துச் சென்று காவல்துறையி னர் தாக்கிய சம்பவம் மாணவர்கள் மத்தி யில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள் ளது. கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள் ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப் படவில்லை. இந்நிலையில் வியாழனன்று இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அப்பள்ளியைச் சேர்ந்த 100 க்கும் மேற் பட்ட மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது, மாணவர்களுக்கு ஆதரவாக வந்த இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா, மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில், அவரை பேச விடா மல் காவல் துறையினர் தடுத்தனர். இதற்கு, நாங்கள் போராட்டம் நடத்த வர வில்லை. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவே வந்துள்ளோம் என மாணவர் கள் தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ் ராஜாவை தரதரவென இழுத்துச் சென்ற னர். மேலும், அவரை காவல்துறையி னரின் வாகனத்தில் ஏற்றி கடும் தாக்குத லைத் தொடுத்து கைது செய்தனர். பின் னர், அங்கிருந்த மாணவர்களையும் விரட்டியடித்தனர். மனு அளிக்க வந்த மாணவர்களை விரட்டியடித்து, மாணவர் சங்க தலைவரைத் தாக்கிய சம்பவம் மாண வர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.