tamilnadu

தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் வழக்கு

சென்னை, ஜூன் 10 - நீதிமன்றம் உத்தரவிட்டும், தனக்குத் தேவையான வாகன வசதிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறி தமிழக அரசு மீது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், காவல்துறை எஸ்.பி.யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தொடர்பான 43 வழக்குகளின் ஆவணங்களை காணவில்லை என்று சொல்கிறார்கள்.  தேவையான 8 ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். நான் சிறப்பாக பணியாற்றுவதை தடுக்கவே, நீதிமன்ற உத்தரவை  அரசு அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.  நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் அவமதிப்பதால் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என பொன். மாணிக்கவேல் கூறியுள்ளார்.