கொரோனா குணமடைதலில் கேரளம் முதலிடம்
கொரோனா குறித்த முன்னெச்சரிக்கையால் நோய் தொற்றிலிருந்து விடுபட்டவர்களில் 81 சதவிகிதத்துடன் கேரளம் முதலிடம் பிடித்துள்ளது. மே 3 ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட 499 நபர்களில் 401 நபர்கள் குணமடைந்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக் கப்பட்ட மாநிலங்களில் அரியானா 62.05 சதவிகிதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு 45 சத விகிதம், தில்லி 30.47, உத்தரபிரதேசம் 27.7, குஜராத் 17.72, மகாராஷ்டிராவில் 16.3 சதவிகிதம் பேர் குணமடைந் துள்ளனர். பத்துக்கும் குறைவான நோயாளிகள் கண்டறியப்பட்ட கோவா, திரிபுரா, மணிப்பூர், அருணாச் சல்பிரதேசம் மாநிலங்களில் அனை வரும் குணமடைந்து விட்டனர்.
இந்தியாவில் முதலாவது கொரோனா நோயாளி கேரளத்தில் ஜனவரியில் கண்டறியப்பட்டார். சீனா வில் மருத்துவம் படித்து வந்த மாணவி அவர். உடனடியாக தொடர்புகளை கண்டறிதல், தனிமைப்படுத்தல், சிகிச்சை என முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மளமள வென அரசு மேற்கொண்டது. அதன் பயனாக கொரோனா நோய் தடுப்பிலும், சிகிச்சையிலும் உலகமே பாராட்டும் அளவுக்கு பல முன்னுதாரணங்களை கேரளம் படைத்தது.
ஊரடங்குக்கு முன்பு கொரோனா ‘பாதிப்பு ஏற்பட்ட வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்க ணக்கான மக்கள் கேரளம் திரும்பி னர். ஊரடங்குக்கு பிறகும் தில்லி உள் ளிட்ட ஹாட் ஸ்பாட்டுகளிலிருந்து தின மும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் கேரளத்துக்கு வருகின்றன. இந்த நிலையிலும் தொடர்புகள் மூலம் நோய் பர வலை 33 சதவிகிதத்துக்கும் குறை வாக தடுக்க முடிந்துள்ளது. கண் காணிப்பில் உள்ளவர்களின் எண் ணிக்கை 1,71,000 லிருந்து 21,720 ஆக குறைந்துள்ளது. முதியோர், வாழ் நாள் நோய்களால் பாதிக்கப்பட்ட வர்கள் குறித்து சுகாதாரத்துறை தனிக் கவனம் செலுத்தியது. தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களையும் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர முடிந்தது கேரளத்தின் உயர்தர மருத்து சிகிச்சை யின் வெளிப்பாடாகும்.