புதுக்கோட்டை, ஜூலை 18- புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதி கள் செய்து தரக் கோரி வியாழக்கிழமை யன்று வகுப்புகளைப் புறக்கணித்துப் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்பறையில் மின்சார வசதி வேண்டும். அதிகப்படியாக உள்ள தேர்வு கட்டணங்களை குறைக்க வேண்டும். அரசு பேருந்துகள் கல்லூரி அருகே நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உதவித்தொகை உடனடியாக கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கல்லூரி நிர்வாகம் ஒப்பு தல் அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.