tamilnadu

img

ஒளி வீசிய மின் ஊழியர் மாநில மாநாடு

நெல்லையில் செங்கொடி ஏந்தி போர் முழக்கம்

திருநெல்வேலி, ஆக.19- நெல்லையில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மூன்றுநாள் மாநாடு செங்கொடி அணிவகுப்புடன் திங்களன்று நிறைவடைந்தது. மின் துறையை தனியார் வேட்டைக்கு திறந்து விடும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனமாக இம்மாநாட்டு நிகழ்வுகள் அமைந்தன. மக்களின் அத்தியாவசிய தேவையான மின் சாரம் தொழில் வளர்ச்சிக்கான மூலாதாரமாக வும் உள்ளது. பொதுத்துறையின் கீழ் இயங்கி வரும் இத்துறையில் படிப்படியாக தனியார் ஆதிக்கம் தலைதூக்கி மின் கட்டண உயர்வுக்கும் நவீன மயம் என்கிற பெயரில் ஆட்குறைப்புக்கும் வழிவகுத்து வருகிறது. இவற்றுக்கு எதிராக வும் பணியாற்றி வரும் ஊழியர்களின் பணி பாது காப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளு டன் நாட்டை அச்சுறுத்தும் வகுப்புவாதம் குறித்தும் மாநாடு விவாதித்தது. அதன் அடிப்ப டையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.   மூன்றாம் நாள் நிகழ்வாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். முன்னதாக பிடிஆர் கலைக்குழு வினரின் நாடகம் நடைபெற்றது. 

மாநாட்டு மண்டபம் அமைந்துள்ள பாளை. அம்பாசமுத்திரம் சாலை ஸ்ரீகணேஷா மகால் அருகிலிருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள காதுகேளாதோர் பள்ளித் திடல்  வரை பல்லாயிரக்கணக்கான மின்வாரிய ஊழி யர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணி யில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது, தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் சாதி, மத சக்திகளுக்கு எதிராக வும் மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்தும் முழக்கமிட்டனர். எழுச்சியுடன் நடை பெற்ற இந்த பேரணியும் அதன் முழக்கங்களும் மக்களது கவனத்தை ஈர்த்தது.  மின் ஒளி அமைப்பில் ஜொலித்த காது கேளாதோர் பள்ளி மைதானத்தில் மாநாட்டு பொதுக்கூட்டம் நடந்தது. எஸ்.எஸ்.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், நிர்வாகிகள் எம்.தனலட்சுமி, கே. அருள்செல்வன், ஆர்.மோகன், எம்.பீர்முகமது ஷா, டி.கந்தசாமி ஆகியோர் பேசினர்.