tamilnadu

img

காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்

சென்னை,மே 8- விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கொரோனா தடுப்புப்பணியில் இருந்தபோது  தலைமைக்காவலர் சேட்டு என்பவர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படை யில்  அரசுப்பணி வழங்கப்படும் என்றும்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

;