tamilnadu

பி.இ படிப்பிற்கு ரேண்டம் எண் வெளியீடு

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 530-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் இரண்டு  லட்சம் வரையிலான இடங்கள் உள்ளன.  இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு, ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்கள் அனுப்ப கால அவகாசம் வழங்கப் பட்டது. இதுதொடர்பாக மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் அறிக்கையில் , இந்தாண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவா்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் கூறினார்.

  இந்த நிலையில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் சேர்க்கை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் அளித்துள்ளார்.