tamilnadu

img

ராதாபுரம்:   தடை நீட்டிப்பு

புதுதில்லி:
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையைஉச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.கடந்த 2016-ஆம் ஆண்டுநடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாகவும் திமுக வேட்பாளர் அப்பாவு49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராதாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள ஒரு அறையில் வைத்து மீண்டும் எண்ணப்பட்டது. இதில் அதிமுக எம்எல்ஏஇன்பதுரை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த  வழக்கில், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிமறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடு வதற்கான தடையை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இறுதி விசாரணை தேதி அடுத்த வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும்  என்றும் தெரிவித்துள்ளது. 

;