tamilnadu

img

கொரோனோ நிவாரணம் ரேஷன் கடை முன்பு திரண்ட மக்கள்

விருதுநகர் மாவட்டம்,  சிவகாசியில் 1000 ரூபாய் நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் பெற ரேசன் கடை முன்பு ஏராளமான  மக்கள் குவிந்தனர்.  
 விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி மருதுபாண்டியர் தெரு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் சமூக விலகலை கடைபிடிக்காமல்  டோக்கன் வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடினர். மொத்தம் 1040 குடும்ப அட்டைகள்  ஒரே  நியாய விலைக்கடையில் உள்ளது. இதனால், கடை ஊழியர்களால் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்க முடியவில்லை. எனவே, குறிப்பிட்ட எண் வரையுள்ள கார்டுதாரர்கள்  நியாய விலைக்கடைக்கு வந்து டோக்கனை பெறலாம் என ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால், அனைத்து கார்டுதாரர்களும்    ஒரே நேரத்தில்  கடை முன்பு திரண்டனர். தகவலறிந்து  வந்த காவல்துறையினர் மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.  அதன் பிறகு குறிப்பிட்ட எண்கள் வரை டோக்கன் வழங்கப்பட்டது.
 

;