tamilnadu

img

அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக ஒலிக்கும் குரல்கள் புதிதல்ல!

ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் மறைமுக பதில்

சென்னை, பிப். 5- மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக ஒலிக்கும் குரல்கள் புதிதல்ல என்று ரஜினிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக பதில ளித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது  முகநூல் பதிவில், இந்தி யாவை மதரீதியாக பிளவு படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய  மக்கள் தொகை பதிவேடு  ஆகியவற்றுக்கு எதிராக  தி.மு.க சார்பிலான மதச்சார்  பற்ற முற்போக்கு கூட்டணி யின் கையெழுத்து இயக் கத்தில் புதனன்று  நந்தனம் கல்லூரி மாணவர்கள் பேரார்வத்துடன் வந்து திர ளாகப் பங்கேற்று கையெ ழுத்திட்டது மகிழ்ச்சி நிறைந்த  ஆச்சரியத்தை அளித்தது. அவர்களிடம், குடியுரி மைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்க நினைத்த போது, “இதன் ஆபத்துகளை உணர்ந்து தான் நாங்களாகவே கையெ ழுத்திட முன்வந்துள்ளோம்” என்ற மாணவர்கள் எவ்வளவு  தெளிவாகவும் தீர்மானமாக வும் இருக்கிறார்கள் என் பதை புரிந்துகொள்ள முடிந்  தது. இந்தப் போராட்டமே டெல்லியிலும் பிற இடங்க ளிலும் மாணவர்கள் முன் னெடுத்த போராட்டம்தான். அரசியல் இயக்கங்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்  திடும் சக்தியாக அமைந்த வர்கள் மாணவர்கள்தான். அவர்களுடன் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், ராமச்சந்திரா குகா போன்ற வரலாற்றாசிரியர்கள், அறி ஞர் பெருமக்கள் எனப் பல ரும் சி.ஏ.ஏ.வை எதிர்த்து வீதிக்கு வந்து போராடியதை நாடு அறியும்.

இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும்  மத-மொழி வேறுபாடுகள் கடந்து, ஆண்-பெண் பேத மின்றி, குடியுரிமை திருத்தச்  சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து, தொடர் போராட்  டத்தில் பங்கேற்று வரு கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவற்று டன் கூடுதலாக, தாய்த் தமி ழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான இந்திய  குடியுரிமையும் வலியுறுத் தப்படுகிறது. அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்  பது ஏமாற்று வேலை என்ப தையும், இலங்கை அரசின்  சட்டம் அதனை அங்கீகரிக்க வில்லை என்பதையும், இந்திய அரசும் அதனை ஏற்க வில்லை என்பதும் நாட்டு  நடப்புகளை அறிந்தவர்க ளுக்கு நன்றாகவே தெரி யும். அதனால்தான் மாண வர்களின் போராட்டம் இந்  தியா முழுவதும் பரவியுள் ளது. மாணவர்களை அரசியல்  கட்சிகள் தூண்டிவிடுவதாக ஒலிக்கும் குரல்கள் புதிதல்ல. பழைய குரல்தான். இந்தி  ஆதிக்க எதிர்ப்புப் போராட் டத்தின்போதும் ஆதிக்க மனப்பான்மையினர் அப்  படித்தான் திரித்துச் சொல்லித் திசை திருப்பப் பார்த்தார்கள். இறுதியில், மொழிப்போரில் வென்றது தெளிவாகவும் திடமாகவும் இருந்த மாணவர்கள்தான். அதைப் போல தற்போது மாணவர்கள்-பெண்கள்-அறி ஞர் பெருமக்கள்-கலைஞர்  கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் ஜனநாயக முறையிலான அமைதி-அறவழிப் போராட்டங்களும் தனது இலக்கை அடைந்து, நிச்சயம் வெற்றி பெறும்.  இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.