சென்னை,நவ.22- மாநில அரசும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங்களில், மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி யுள்ளார். கடந்த இரு ஆண்டுகளில், பிற்ப டுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி. பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இடஒதுக்கீடு கொள் கையை புறக்கணித்து, பறிக்கப் பட்டிருப்பதாக அவர் குறிப் பிட்டுள்ளார்.
பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்க ளில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டு களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப் பட்டன? என்பது உள்ளிட்ட அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்க ளும் அடங்கிய வெள்ளை அறிக்கையை மக்களவையின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி யுள்ளார். மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள் ளார்.