tamilnadu

img

மாமேதை லெனின் - 150

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாமேதை லெனின் பிறந்த தினத்தை முன்னிட்டு  லெனின் சிலை முன்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வும், அதனை தொடர்ந்து நூல் வாசிப்பும் நடைபெற்றது. நிகழ்வில் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், ஆர்.மோகன், துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர் வரகுணன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  மாவட்ட தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மாமேதை லெனின் - 150  ஆவது பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 22 புதனன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது. மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் லெனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் பேசினார். மூத்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன், பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், மேலாளர்கள் ஆர்.உமாபதி. க.பாண்டியராஜன், மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.