tamilnadu

img

மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய அரசுக்கு கடிதம்

சென்னை,ஜூன் 29- மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு, தமிழக அமைச்சர்  டி. ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டி ருப்பதாவது:- சென்னை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் கடந்த 5 ஆம் தேதி 7 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதுவரை அவர்  கள் கரை திரும்பவில்லை. ஆந்திர மாநிலம் ஓங்கோ லுக்கு கிழக்கு பகுதியில் அந்த நாட்டு படகு கவிழ்ந்து  கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகே மீனவர்கள் யாரும் தென்படவில்லை. இதுகுறித்து ஆந்  திர அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. அவர்  களை கண்டுபிடிக்க எத்தனை நடவடிக்கைகள் எடுத்  தாலும் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. தற்போது கடலில் நிலவும் காலநிலையை கணிக்  கும்போது தென் கிழக்கு ஆசிய நாடுகளான வங்காள தேசம், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்  பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய  ஏதோ ஒரு நாட்டுக்கு அவர்கள் சென்றிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இது சம்பந்தமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தமிழக  அரசு ஏற்கனவே கடிதங்கள் எழுதி உள்ளது. எனவே,  நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு அவர்கள்  7 பேரையும் கண்டுபிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.