மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்
சென்னை, ஆக. 4- ஆகஸ்ட் 20-26 மாபெரும் மக்கள் இயக்கத்தை நடத்துவதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுக்கூட் டம் 2020 ஜூன் 30 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு மத்தியக் குழு முடிவுகளை விளக்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் என். குணசேகரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்க ராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:
இ-பாஸை ரத்து செய்க!
பொதுப்போக்குவரத்தை படிப் படியாக அனுமதிக்க வேண்டும் -கொரோனா தொற்றுக்கான சோதனைகளை அதிகப்படுத்துவது, சிகிச்சையை மேம்படுத்துவது, மரணங்களை தடுக்க தீவிர நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண் டும். மக்களது வாழ்வாதாரத்திற்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும். ஊரடங்கை படிப்படியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 20-26 மகத்தான மக்கள் இயக்கத்தை நடத்து வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. பலி எண்ணிக்கையும் சற்றேறக் குறைய 4 ஆயிரத்தை நெருங்கி யுள்ளது. அடுத்து வரும் காலங்களில் நோய்த் தொற்று தீவிரமடையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து ள்ளது. கிராமங்களிலும் நோய்த் தொற்று பரவுவதால் தமிழக மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தலைவிரித்தாடும் ஊழல்
நோய்த் தொற்று காரணத்தால் தொடர்ந்து நீட்டிக்கப்படும் ஊரடங்கி னால் தமிழகத்தில் பொதுமக்களது வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. விவசாயம், தொழிற் சாலைகள், பேருந்து, ரயில் போக்கு வரத்து, வர்த்தகம், சுற்றுலா மையங் கள் அனைத்தும் முடங்கியுள்ளன. பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரணம் “யானைப் பசிக்கு சோளப்பொரி” போலவே உள்ளது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகள் பரி சீலிக்கப்படவில்லை.
மருத்துவ உபகரணங்கள், நோய் சிகிச்சை, ஊழி யர்கள் பணியமர்த்தல் உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் - முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது. நோய் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு மாறாக பல ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் விடுவதில்தான் அதிமுக அரசு முனைப்புக்காட்டுகிறது. இதில் அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து ஊரடங்கை நீடித்து அதன்மூலம் மக்கள் உரிமைகள் முடக்கிப்போடப்பட்டுள்ளன. பாதிக்கப் பட்ட மக்கள் பொதுவெளியில் போரா டுவதற்கும், கருத்துதெரிவிப்பதற்கும் உரிமையற்ற நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. நோய்த் தொற்று மற்றும் சிகிச்சை பணிகளில் அரசின் அக்கறையின்மையின் காரணமாக அதிகரித்து வரும் பலிகளைப் பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை. பலி எண்ணிக்கையைக் கூட குறைத்துக் காட்டி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மறுபுறத்தில் வாழ்விழந்து தவிக்கும் மக்களுக்கு போதுமான நிவார ணம் அளிப்பது குறித்தும் கவலைப்பட வில்லை. கொரோனா காலத்திலும் அனைத்து மட்டங்களிலும் ஊழல் புரிவது ஒன்றே முழுமையான பணியாக அதிமுக அரசு செய்து வருகிறது. மறுபுறம் தமிழகத்தில் பெண்கள் - குழந்தைகள் மீதான தாக்குதல், தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்துள்ளன
மோடி அரசு அராஜகம்
கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு நிதி அளிக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு மாறாக, தேச விரோத, மக்கள் விரோத நடவடிக்கை களை மத்திய அரசு அதிரடியாக மேற் கொண்டுள்ளது. ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரை வார்ப்பது, விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கான அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது. மின்சார சலுகையை பறிக்கும் மின்திருத்த மசோதா, கூட்டுறவு நிறுவனங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றி யுள்ளது, இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடையின்றி சூறையாட ஒப்படைப்பது, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை மாற்றியுள்ளது, ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநில அரசுகளுக்கு தர மறுப்பது, கல்வியை வணிகமயமாக்கும் மற்றும் வகுப்புமயமாக்குகிற புதிய கல்விக் கொள்கையை திணிப்பது, தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது, போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை உரிமை, பணி நிரந்தரம் உள்ளிட்ட சட்டங்களை திருத்துவது, பேச்சுரிமை - எழுத்துரிமையை பறிப்பது, அரசின் நட வடிக்கைகளை விமர்சிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அராஜகமான நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழக அரசு குரல் கொடுக்காமல் வாய்மூடி மௌனியாக இருப்பது தமிழக மக்கள் மீது இவர்களுக்குள்ள அக்கறையற்ற தன்மை யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் மதப் பதற்றத்தை உருவாக்குகின்றன. ஊடகங்களை குறி வைத்து தாக்குவது, மாற்றுக் கருத்துள்ள ஊடகவியலாளர்களை மிரட்டுவது, இதன் மூலம் மொத்த ஊடகத்தையும் தன் கைப்பாவையாக மாற்ற முனைகிறது இந்துத்துவா கூட்டம். தமிழக அரசின் காவல்துறையும் பாஜகவிற்கு அடிபணிந்து செல்லும் நிலையே காணப்படுகிறது. தொடர் பொதுமுடக்கத்தின் காரண மாக மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப் பட்டுள்ளது. இ-பாஸ் வாங்க வேண்டு மென்பதால் சாதாரண குடும்ப நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள முடி யாமல் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர். இ-பாஸ் வழங்குவதிலும் ஊழல் - முறை கேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. பொதுப் போக்கு வரத்து தொடர்ந்து முடக்கப்படுவ தால் நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட வில்லை என்பதோடு தொழிலாளர்கள், தின உழைப்பாளிகள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
மாபெரும் மக்கள் இயக்கம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இம்மோச மான நிலை குறித்து அனைத்துக்கட்சிகளை கூட்டி கலந்தாலோசிப்பதற்கும் தமிழக அரசு தயாராக இல்லை. மக்களிடம் கருத்து கேட்டு அவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இந்த பின்னணியில் அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 20-26 வரை மாபெரும் மக்கள் இயக்கம் நடத்த வேண்டு மென கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
இதனையொட்டி தமிழகத்தில் வீடு, வீடான பிரச்சாரமும், ஆகஸ்ட் 25 - 26 தேதிகளில் மாபெரும் மக்கள் இயக்க மும் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நடைபெறும் இப்போராட்ட த்திற்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்து கலந்து கொள்ள வேண்டுமெனவும், கட்சி அணிகள் முழுமையாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் மாநிலக்குழு அறை கூவல் விடுக்கிறது.