tamilnadu

img

கள்ளக்குறிச்சி தொழிலாளர்களுக்கு கேரளாவில் முழு பாதுகாப்பு, உணவு

சீமானின் அவதூறுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில்

கள்ளக்குறிச்சி, ஏப்.17- கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பாது காத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை யீட்டின் பேரில் கேரள அரசு அவர்களுக்கான முழு உதவிகளைச் செய்து வருகிறது. இதுபற்றிய விபரம் வருமாறு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றி யத்தைச் சேர்ந்த உ.நெமிலி கிராமத்தில் வசிக்கும் 43 ஆண், பெண் தொழிலாளர்கள் பிழைப்பிற் காகக் கேரளாவிற்குச் சென்று வேலை பார்த்து வந்தனர். இதேபோல இதே ஒன்றியத்தைச் சேர்ந்த திருநறுங்குன்றம் கிராமத்தில் வசித்த 24 பேரும், கள்ளக்குறிச்சி வட்டம் நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த 33 தொழிலாளர்களும், சின்ன சேலம் வட்டம் தென்சிறுவள்ளூர் கிரா மத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் என சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் கேரளாவில் கொல்லம், மலப்புரம், எர்ணா குளம், கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினக்கூலி வேலை பார்த்து வந்தனர்.

கொரோனா வைரஸ் பரவியதையொட்டி மத் திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினால் தங் கள் சொந்த கிராமத்திற்கு திரும்ப முடியாமல் கடு மையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக உள்ளூ ரில் உள்ள உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்த னர். அவர்களின் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகி களுக்கு இதனைத் தெரிவித்தனர்.

உடனடியாக கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் உள் ளிட்ட அதிகாரிகளுக்கு மேற்கண்ட தொழிலாளர் களை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வர வேண்டுமென மனு அளித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலத் தலைமை மூலம் கேரள அரசிற்கும், அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் உடனடியாக மேற் கண்ட அத்தனை தொழிலாளர்களுக்கும் உரிய முறையில் பாதுகாப்பு, தங்குமிடம், உணவு மற் றும் உதவிகள் அத்தனையும் கேரள அரசு நிர்வாக மும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளும் செய்து கொடுத்தனர். போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப் பட்ட நிலையில் சொந்த கிராமத்திற்கு அவர் களை அழைத்து வர இயலாத சூழல் நிலவுவதால் ஊரடங்கு முடிந்தவுடன் உரிய ஏற்பாடுகள் செய் யப்பட்டு அவர்கள் சொந்த கிராமங்களுக்கு அனுப்ப கேரள அரசு ஏற்பாடு செய்ய உள் ளது.

உண்மைக்கு மாறாகப் பேசும் சீமான்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேற் கண்ட தொழிலாளர்கள் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் கேரளத்தில் பாதுகாப்பாக இருக் கின்றனர். ஆனால் ஒரு தனியார் தொலைக்காட்சி யில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தொழி லாளர்கள் கேரளாவில் தவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான செய்தியாகும். 

கடந்த மார்ச் 26ஆம் தேதியே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு இத்தொழிலாளர்கள் தொடர்பான மனு அளிக்கப்பட்டு உள்ளது. தமி ழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததா என்ற  எந்த தகவலும் இல்லாத நிலை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போதே உரிய முறையில் தலையிட்டு தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். எனவே சீமான் கூறி யது உண்மைக்கு மாறானது. எர்ணாகுளத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உரியப் பாதுகாப்பு ஏற்பாடு களுடன் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும்   கேரளா மாநில கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் தலைவர்களும் தொடர்ந்து அனைத்து ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை தெரிவித்துள்ளார்.