tamilnadu

img

கோவை, மதுரை, நெல்லையிலும் ‘முழு உடல் பரிசோதனை’

சென்னை,ஜூலை 16- சென்னையில் செயல்படுத்தப் பட்டு வரும் அம்மா முழு உடல்  பரிசோதனை மற்றும் அம்மா மக ளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை  திட்டம், கோவை, மதுரை, நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் விரிவு படுத்தப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். முதன் முதலில் சென்னை அரசு  பொது மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் துவங் கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், இது வரை 33 ஆயிரத்து 631 நபர்கள் முழு  உடல் பரிசோதனை செய்து பயன டைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன்  மாதம், ஓமந்தூரார் அரசு பன் னோக்கு மருத்துவமனைக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

அங்கு இதுவரை 6 ஆயிரத்து 323  பேர் பயனடைந்துள்ளனர். இந்  நிலையில் இந்த திட்டம் வரும் ஆண்டுகளில், கோவை, மதுரை,  நெல்லை மாவட்ட அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை களுக்கும் விரிவுபடுத்தப்பட வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசால் கடந்த 2012ம் ஆண்டு முதல் செயல்  படுத்தப்பட்டு வரும் முதலமைச்ச ரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு  திட்டத்தின் மூலம், 36 லட்சத்து  83 ஆயிரத்து 597 பேர் பயன டைந்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக 5 ஆயி ரத்து 838 கோடி ரூபாய் செல விடப்பட்டுள்ள நிலையில், அரசு பொது மருத்துவமனைகளில் 15  லட்சத்து 34 ஆயிரம் பேர் பயன டைந்துள்ளதாகவும் கொள்கை  விளக்க குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.