சென்னை, ஜன.10- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றாக விலகியுள்ளதால் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தமிழகம், புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துட னும் காணப்படும், அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.