சேலம், நவ.11- சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள ஆ.தாழையூா் மேட்டு முனி யப்பன் கோயில் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை நேர்ந்த கோர விபத்தில் தனியார் சுற்றுலா வாகன ஓட்டுநர் உயிரிழந்தார். பய ணிகள் 24 போ் படுகாயம் அடைந்தனர். சேலம் வழியாக கேரளா சென்ற தனியார் வாகனம் மகுடஞ்சாவடி அருகே திங்கள்கிழமை அதிகாலை 1:45 மணிக்கு ஆ.தாழையூா் மேட்டுமுனியப்பன் கோயில் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீ ரென ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்தது. இதனால் ஈரோடு - சேலம் நோக்கி சென்றுகொண்டி ருந்த தனியார் பேருந்து மீது மோதியதில் தனியார் சுற்றுலா வாகன ஓட்டுநர் பாஸ்கா் (41) சம்பவ இடத் தில் உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த 24 போ் படு காயமடைந்தனா். இதில் குழந்தைவேலு, ஆறுமுகம், அம்மாயி, மோகன், ராம்குமார், சண்முகம், சிவகுமார், சசிகுமார், லட்சுமணன், அண்ணாதுரை, சிந்துஜா, பாலம்மாள், தினேஷ் உள்ளிட்டோர் சீரகா பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.