சென்னை,பிப்.7- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் தேர்வுகளில் முறைகேடுகள் செய்து வேலை பெற்றதும் அவைகள் வெளிச்சத்திற்கு வந்து சில நபர்கள் கைது செய்யப்பட்டதும் நிகழ்ந்தது.இதன் எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 6 புதிய சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வு எழுதும் நபர்களின் விவரம் முழுமையாக இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் உரிய கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக்கொள்ளலாம். தேர்வு எழுதும் மையங்களை தேர்வாணையமே இனி தேர்வு செய்யும். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் கட்டாயம். ஆதாரோடு ஒப்பிட்ட பிறகு தேர்வர் இனி தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். முறைகேடுகள் இருப்பின் முன்கூட்டியே கண்டறியும் உயர் தொழில்நுட்பத் தீர்வு நடைமுறைப்படுத்தப்படும். தேர்வர்களின் கைரேகை பெறப்பட்டு ஆதாருடன் ஒப்பிட்ட பிறகே இனி தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.