tamilnadu

img

தனிமைப்படுத்தும் மையத்திற்கு 1,472 குடியிருப்புகள் மாநகராட்சிக்கு ஒப்படைப்பு

சென்னை, ஏப்.12- கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற் காக 1,472 குடியிருப்புகளை மாநகராட்சியிடம் ஒப்ப டைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நட வடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்  மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உயர்  அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை தலைமைச் செயல கத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், சென்னையில் கொரோனா  தனிமைப்படுத்தும் மையத்திற்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சென்னை  மாநகராட்சியிடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப் பட்டுள்ளது. வியாசர்பாடி கே.பி. பார்க், திருவொற்றி யூர் நல்லதண்ணீர் ஓடைகுப்பம், இந்திராகாந்தி குப்பம் ஆகிய பகுதியில் உள்ள 1,472 குடியிருப் புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்காக அரியலூர், பெரம்பலூர், தஞ்சா வூர் மாவட்டங்களில் மொத்தம் 1,176 குடியிருப்பு கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது. அங்கன்வாடியில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தினமும் மூன்றா யிரம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு  வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.