tamilnadu

img

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

சென்னை, அக். 14- தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு பணியை ஆய்வு செய்ய 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் பணிகளுக்காக அறி விக்கப்பட்ட அவகாசம், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர்கள் நவம்பர் 18ஆம்  தேதி வரை சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள லாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வாக்காளர் சரிபார்ப்பு பணியை ஆய்வு செய்ய 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிய மிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரத சாகு, தமிழகம் முழுவதும் மூன்று மாவட்டத் திற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீதம் மொத்தமாக 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாக்காளர் சரிபார்ப்பு பணியை ஆய்வு செய்வார்கள்” என்றார்.

;