மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்
புதுதில்லி, மே 30- வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கி கள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு.இதுகுறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக் கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பர வல் தடுப்பு ஊரடங்கால் மக்கள் வருமான மின்றி,வேலையின்றி அவதிப்பட்டு வரு கின்றனர். இதையடுத்து, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 6 மாதங்களுக்கு, இ.எம்.ஐ., செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.ஆனால் இதனையும் மீறி இஎம்ஐ பிடித்தம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்க ளில், வீடு, வாகனம், கல்விக் கடன் வாங்கிய வர்களுக்கு, சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து, இந்த மாத, இ.எம்.ஐ., பிடித்தம் செய்யப்பட உள்ளது. எனவே, போதிய அளவு தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருங்கள்’ என்று நினை வூட்டல், எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. இது, கடன் வாங்கியவர்கள் மத்தியில் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை ஊரடங்கின் ஆரம்பித்திலிருந்தே உள்ளது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு எந்த வொரு விளக்கமும் அளிக்கவில்லை என்று மக்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நீண்டநாள்களுக்கு பிறகு இந்த பிரச்சனை குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது. அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கி கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.