tamilnadu

img

நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி : லண்டன் நீதிமன்றம்

நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மோசடி செய்து லண்டனுக்கு தப்பி விட்டார்.

இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் 19-ந்தேதி கைது செய்யப்பட்டார். 20-ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் இருமுறை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதனை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து மூன்றாவது முறையாக தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை 30-ம் தேதி நடக்கிறது. 


;