tamilnadu

img

லைபீரியா நாட்டு பள்ளியில் தீ விபத்து - 30 பேர் உயிரிழப்பு

லைபீரியா நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.

லைபீரியா நாட்டில் உள்ள மொன்ராவியா தலைநகரில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று தீவிபத்து ஏற்பட்டது.thoth எதிர்பாராமல் ஏற்பட்ட இத்தீவிபத்தில் 28 பள்ளி மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து விபத்துக்கான காரணங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

;