tamilnadu

img

பிரேசில் இடதுசாரி தலைவர் லூலா விடுதலை

சிறையில் அடைத்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரியோ டி ஜெனிரோ, நவ.10- பொய்யாக ஊழல் வழக்கு புனையப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், பிரேசில் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா  விடுதலை செய்யப்பட்டார். மேல்  முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கா மல் சிறையில் அடைத்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது;எனவே  லூலாவை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் சுப்ரீம் பெடரல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்ட நிலையில்,  அவர் ஞாயிறன்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளில் லூலா முன்னிலை வகித்தார். முதல் சுற்றில் வெற்றிபெற வாய்ப்புள்ள ஒரே வேட்பாளர் என கருதப்பட்டார். 

இந்நிலையில் அவர் மீது அமெரிக்க கைக்கூலி வலதுசாரி ஆட்சி யாளர்களால் ஊழல் புகார் புனையப் பட்டது. இந்த வழக்கில் அவருக்கு  8 ஆண்டுகளும், 10 மாதமும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறையில் அடைக் கப்பட்டார். இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. இந்த நிலையில் அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய பிரேசில் சுப்ரீம் பெடரல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. பிரேசில் நாட்டைப் பொறுத்த வரையில்  குற்றவாளி என தீர்ப்பு  அளிக்கப்படுகிறபோது, அந்த தீர்ப்பை  எதிர்த்து அவர்கள் உள்ளூர் நீதிமன்றத் தில் 3 முறையும், உயர்நீதிமன்றத்தில் ஒரு முறையும், இறுதியாக சுப்ரீம் பெடரல் நீதிமன்றத்திலும் மேல்முறை யீடு செய்ய வாய்ப்புகள் தரப்பட வேண்டும். இந்த வாய்ப்பு தரப்படாமல் லூலா சிறையில் அடைக்கப்பட்டதை சுப்ரீம் பெடரல் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.  அவரை சிறையில் அடைத்தது அரசியல் சாசன கொள்கை க்கு எதிரானது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தீர்ப்பினையடுத்து, கியூரிடிபா மத்திய காவல் தலைமையகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த லூலா விடுதலை செய்யப்பட்டார். கட்சித் தோழர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக வந்து லூலாவை வரவேற்று  அழைத்துச் சென்றனர்.