ரஷ்யா நாட்டில் அணை உடைந்து சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததால் 12 பேர் உயிரிழந்தனர். இதில்14 பேர் காயமடைந்தனர்.
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் உள்ள தங்கச் சுரங்கத்தில் நேற்று இரவு சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் திடீரென சுரங்கத்தின் மேல் உள்ள நீர்த்தேக்கம் உடைந்தது. இதையடுத்து தண்ணீர் சுரங்கத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அவசரநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். மேலும், ரஷ்ய அவசர அமைச்சகத்தின் சைபீரியா மீட்பு மையத்தைச் சேர்ந்த 200 பணியாளர்கள், 5 எம்ஐ -8 ஹெலிகாப்டர்கள் மற்றும் எம்ஐ-26 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஒரு விமானப் பிரிவினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தினுள் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.