tamilnadu

ஹவுரா-தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

லக்னோ, ஏப்.20- ஹவுராவில் இருந்து தில்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் காய மடைந்தனர். ஹவுராவில் இருந்து புதுதில்லி நோக்கி செல்லும் விரைவு ரயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் வெள்ளியன்று புறப்பட்டது. இந்த ரயில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரை சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு அடைந்தது. அப்போது ரயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர்.தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

;