tamilnadu

ராமர் பெயரால் பிஜேபி-சங் பரிவார் நடத்தும் வன்முறைகளை ராமபக்தர்கள் எதிர்க்க வேண்டும்

திருவனந்தபுரம், ஜூலை 26- அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்கிற அகங்காரத்தில் கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எதிராக சங்பரிவார்கள் தொடர்ந்து நடத்திவருகிற வன்முறைகளின் தொடர்ச்சிதான் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு எதிராகவும் பாய்ந்துள்ளது என்று கேரள புரோகமன  கலா சாகித்ய சங்கம் (கேரள முற்போக்குக் கலை இலக்கிய சங்கம்) கண்டனம் தெரிவித்துள்ளது. அடூர் கோபால கிருஷ்ணன் உலகம் பாராட்டுகிற ஓர் உத்தமக் கலைஞர்.

கேரள மக்களின் அபி மானத்திற்கு உரியவர். அவருக்கு எதிராக பிஜேபி என்கிற அரசியல் கட்சி மிரட்டல் விடுத்துள்ளது. தங்களை அனுசரித்து நடந்துகொள்ளவில்லை யென்றால் இந்தப் பூமியைவிட்டே போய்விட வேண்டுமென்கிறது அவர்களின் மிரட்டல். அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு எதிரான  இந்த மிரட்டலை முற்போக்குக் கலை இலக்கிய சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மிகச்சிறந்த படைப்பாளியாகிய அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு எதிரான மிரட்டல் முயற்சிகளை கேரளம் ஒருமனதாக எதிர்த்துத் தோல்வியுறச் செய்யும் என்றும் இந்தப் படைப்பாளர் சங்கம் தெரி வித்துள்ளது. இரண்டாம் முறையாக அதிகாரத்திற்கு வந்துள்ள அகங்காரத்தில் இந்த மனுவாத தீவிரவாதிகள் நாடெங்கும் தலித் மக்களுக்கும், பிற்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும்  கலைத்துறையினர்க்கும் எதிராகத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மக்களைத்  தாக்குவதற்கு இப்போது அவர்கள் பயன்படுத்து வது  ஸ்ரீராமனை. ஆயிரக்கணக்கான பக்தஜனங்கள் ராமனை வழிபடுகிறார்கள். வால்மீகியின் நிலை யான கதாபாத்திரம் ராமன். சாதாரண மக்களைத்  தெருவில் தடுத்து மிரட்டுவதற்கு ஒரு கொடு வாள் போல இன்று ராமன் பெயரை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். ராமனுக்கும் ராமபக்தர்களுக்கும் இதுபோலொரு அவமானத்தைச் செய்ய வேறெதுவும் இல்லை. மதவாத அரசியல் செய்வோர் அதிகாரத்திற்கு வரவும், அதை நிலைநிறுத்தவும் மக்கள் வழிபடுகிற இதிகாச நாயகர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதை பக்தஜனங்கள் எதிர்த்துத் தோல்வியுறச் செய்ய வேண்டும்.  அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு எதிரான பிஜேபி-சங்பரிவார் மிரட்டல்களுக்கு எதிராகக் கேரளம் முழுவதும் படைப்பாளர்களின் கண்டனங்கள் எழவேண்டுமென்று அனைத்து கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் முற்போக்குக் கலை இலக்கிய சங்கம் வேண்டுகிறது என இந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் அசோகன் சருவில் தான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். செய்தி: தேசாபிமானி (26.7.2019)