ராஜஸ்தானில் கோவிட் 19 நோயாளிகளை பாதுகாக்க இந்த ஆண்டு பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 14 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாடு முழுவதும் பட்டாசு விற்பனை சூடு பிடிக்க துவங்கி உள்ளது. இந்நிலையில் கோவிட் நோயாளிகளை பாதுகாக்கும் பொருட்டு ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
பட்டாசுகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை காரணமாக கோவிட்19 பாதிக்கப்பட்ட நோயாளிகள், பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் உடல் தகுதி சான்றிதழ் இல்லாமல் வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.