tamilnadu

img

கோயிலுக்குள் நுழைந்ததாக கூறி தலித் சிறுவன் மீது தாக்குதல்!

ஜெய்ப்பூர்:
கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்ற தலித் சிறுவனை, சாதிவெறியர்கள் கட்டிப்போட்டு, கொடூரமான முறையில், அடித்து உதைத்தசம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக் கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும் ஏற் படுத்தியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திற்கு உட்பட்ட கோயில்ஒன்றில்தான் இச்சம்பவம் நடந் துள்ளது. இந்த கோயிலுக்குள் தலித் சிறுவன் சாமி கும்பிட சென்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த சாதிவெறியர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த சிறுவன் எப்படி கோயிலுக்கு வரலாம் என்று கூறி, வயல் வெளியில் அந்த சிறுவனின் கையையும், காலையும் கட்டிப்போட்டுகொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

ஒரு சின்னச்சிறுவனை, நான்கைந்து பேர் சேர்ந்து, கோயிலுக் குள் நுழைவாயா? என்று கேட்டுக்கொண்டே, உருட்டுக் கட்டைகளால் தாக்குவதும், இனிமேல் கோவிலுக்குள் நுழைய மாட்டேன் என்று அச்சிறுவன் கதறும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, வன்கொடுமைத் தாக்குதலில் ஈடுபட்ட சாதி வெறியர்கள் 4 பேரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அதேநேரம், பூசாரியின் மகளிடம் சிறுவன் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக, சாதிவெறியர்கள் அளித்த புகாரின்பேரில், தலித் சிறுவனையும் போலீசார் கைது செய்து, சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.

;