tamilnadu

img

ரூ.5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு

புதுதில்லி, ஜூன் 15- நாட்டின் பொருளாதார மதிப்பை, வருகிற 2024ஆம் ஆண்டிற்குள், 5 லட் சம்கோடி டாலர் மதிப்புள்ளதாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குடியரசு தலைவர் மாளிகையில், நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின், ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட, அனைத்து மாநிலங்களின் முத லமைச்சர்களும், யூனியன் பிரதேசங்க ளின் துணைநிலை ஆளுநர்களும் பங்கேற்றனர். மாலை 3.55 மணியளவில் தொடங் கிய நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், மேற்குவங்க முதல மைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம ரீந்தர் சிங் ஆகியோர் பங்கேற்கவில்லை. நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2024ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த இலக்கை அடை வது மிகவும் சவாலானது என்றாலும், அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பு இருந்தால், எளிதில் அடைய முடி யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரி வித்தார். நாட்டின் நீர்வள ஆதாரங்களாக உள்ள ஆறுகள், வற்றாத ஜீவநதி களை இணைத்து, நிலத்தடி நீர்மட் டத்தை உயர்த்துவதோடு, தட்டு பாடில்லாத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, ஜல் சக்தி என்ற பெயரில், நீர் ஆற்றல் துறை அமைச்ச கம், புதியதாக ஏற்படுத்தப் பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.