tamilnadu

img

14.78 லட்சம் பேருக்கு தலா ரூ.1000 விநியோகம்

கேரளத்தில் அரசின் நிதி உதவி கிடைக்காத

திருவனந்தபுரம், மே 13- கேரள அரசு அறிவி்த்துள்ள சமூக ஓய்வூ தியம், நல நிதி உதவிகள் கிடைக்காதவர் களுக்கான ஆயிரம் ரூபாய் நிதி விநியோ கம் வியாழனன்று (மே 14) தொடங்க உள் ளது. இந்த உதவி யாருக்கெல்லாம் கிடைக் கும், அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் தனது முகநூல் பக்கத்தில் கேள்வி பதில் வடிவத்தில் வழிகாட்டியுள் ளார்.

அதன்படி, கோவிட் பொருளாதார தொகுப்பின் பகுதியாக இதுவரை ஒரு நல ஓய்வூதியமோ நிதி உதவியோ கிடைக்காத பிபிஎல், அந்த்யோதயா குடும்ப அட்டை தாரர்களுக்கு வியாழக்கிழமை முதல் மாநில அரசின் உதவியாக ரூ.1000 வீதம் கிடைக்கும். இத்தொகை 14,78,236 குடும்ப அட்டைதா ரர்களுக்கு வழங்கப்படும். பயனாளிகளின் பட்டியல் ரேசன் கடைகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ளன. பட்டியலில் பெயர் உள்ளவர்கள் செவ்வாயன்று வெளி யான நாளிதழ் விளம்பரத்தில் அளிக்கப் பட்டுள்ள படிவத்தை நிரப்பி கையெழுத் திட்டு வீட்டுக்கு வரும் கூட்டுறவு வங்கி ஊழி யரிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ள லாம். பணம் கொண்டு வருவோருக்கு எந்த வித தொகையும் வழங்க வேண்டியதில்லை. அவர்களுக்கான சம்பளத்தை கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு வழங்கும்.

படிவத்தில் வங்கி கணக்கு எண்ணும், ஆதார் எண்ணும் பதிவு செய்வது, தகுதி யான பயனாளிக்குதான் பணம் வழங்கப்படு கிறது என்பதை உறுதி செய்வதற்காகவும். மீண்டும் பணம் வழங்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டால் வங்கி கணக்கில் செலுத்து வதற்குமாகும். பிபிஎல் அந்த்யோதயா குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல், சமூக நல ஓய்வூதியம், நல வாரிய ஓய்வூதியம் பெறுவோரின் பட்டியலுடன் அதார் எண்ணை ஒப்பிட்டு ஓய்வூதியம் பெறாத வர்களின் பட்டியல் தயார் செய்யப்பட் டது. அதில் இருந்து பயனாளிகள் கண்ட றியப்பட்டனர். இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவியை மத்திய அரசின் கீழ் உள்ள என்ஐசி கேரளம், மாநில அர சின் ஐஐடிஎம்கே ஆகிய நிறுவனங்கள் வழங்கின. இந்த திட்டத்திற்கான தொகை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு எந்த நிதி உதவியும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.