tamilnadu

img

ராஜஸ்தானில் 45 வயது பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு - இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோ 

ராஜஸ்தானில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாவட்டத்தில் ஆழ்வார் மாவட்டத்தில் 45 வயது பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை வீடியோவாக இணையத்தில் வெளியிட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

திருமணமான பெண் ஒருவர் அவரது உறவினருடன் ஒருவருக்குக் கடன் கொடுக்கப் பணம் கொண்டு சென்றுள்ளார். அவர்கள் பணம் கொடுத்துவிட்டுத் திரும்பும் போது,  ஒரு மலையில் 6 பேர் கொண்ட கும்பல் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர். இதனைத் தடுத்த அவரது உறவினரைத் தாக்கியுள்ளனர். அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பரப்பியுள்ளனர். 

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இது குறித்துக் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில், இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள்.
 

;