மாட்டு கோமியத்தை குடிப்பதால் கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
கோமியத்தை குடிப்பது தொடர்பாக அவ்வப்போது திலீப் கோஷ் கருத்துகளை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். இம்முறை கொரோனா பரவல் காலத்திலும் திலீப் கோஷ் இதேபோல் கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
பசுவை பற்றி பேசினாலே சிலருக்கு அலர்ஜியாகிவிடுகிறது. பசுவின் மகத்துவம் குறித்து கழுதைகளுக்கு என்ன தெரியும்? இது இந்துக்களின் தேசம். பசுக்களை தெய்வமாக வணங்கிய கிருஷ்ணரின் பூமி இது.
நமது உடல் திடகாத்திரமாக இருக்க கோமியத்தை குடிக்க வேண்டும். மதுபானங்களை குடிக்கின்றவர்கள் எப்படி பசுவின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்? தற்போது கொரோனா பரவல் காலம். ஊரடங்கை தளர்த்திய உடனே மதுபான கடைகள் முன்பு நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். என்று கூறியுள்ளார்.
திலீப் கோஷ் தொடர்ந்து பல முறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .