tamilnadu

img

மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா... ஒரே நாளில் 47 பேருக்குப் பாதிப்பு

மும்பை
நாட்டின் நிதிநிலை தலைநகரை (மும்பை)  பெற்றுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிய நாள் முதல் இன்று வரை மகாராஷ்டிரா டாப் ஆர்டரில் தான் பயணித்து வருகிறது. அதாவது முதல் இடத்தில் தான்.  

நேற்றைய நிலவரப்படி அங்கு 490 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனியன்று ஒரே நாளில் 47 பேர் அடுத்தடுத்து கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதிய நிலவரப்படி  மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின்  எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக தாராவி குடிசை பகுதியிலும் கொரோனா தொற்று பரவுவது அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. 
 

;