tamilnadu

img

தினமும் 100 பேர் பலி... கொரோனாவால் திணறும் மும்பை... 

மும்பை
நாட்டில் கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலிருந்து இன்று வரை மகாராஷ்டிரா மாநிலம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

இதுவரை அங்கு 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 984 பேர் பலியாகியுள்ள நிலையில், 64 ஆயிரத்து 153 பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது மும்பை தான். இங்கு சென்னையை போல மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பரவல் வேகத்தை கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக உள்ளது.

அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக பலி எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உள்ளது. அங்கு நேற்று பலி எண்ணிக்கை 100 தாண்டிய நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 136 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மும்பையில் மொத்த பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 561 ஆக உயர்ந்து உள்ளது. மும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டலே மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு விபரத்தில் பெரிதாக மாற்றம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.  

;