“சிறைத் தண்டனை விதிக்க நேரிடும்”
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வர் ஜான்சி மெர்லின். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவ மதிப்பு வழக்கில், ‘நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் கடந்த 2007ஆம் ஆண்டு உடற்பயிற்சி ஆசிரியராக பணியில் சேர்ந்தபின், எனது பணி நியமனத்துக்கு கல்லூரி கல்வியியல் இணை இயக்குநர் ஒப்புதல் அளித்தார். ஆனால், பணியில் சேர்ந்த 2007 ஆம் ஆண்டு முதல் எனக்கு ஊதியம் உள்ளிட்ட எந்த பண பலன்களையும் வழங்கவில்லை என இணை இயக்குநருக்கு மனு கொடுக் கப்பட்டது. அதற்கு பதிலளித்த இணை இயக்குநர், இந்த பணி நியமனத்துக்கு உயர் கல்வித்துறை செயலாளரிடம் இருந்து ஒப்பு தல் பெற வேண்டும் என 2022ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.’ என தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், இணை இயக்குநரின் உத்தரவை ரத்து செய்ததுடன் 2007ஆம் ஆண்டு முதல் ஊதியம் உள்ளிட்ட அனைத்து பண பலன் களையும் வழங்க வேண்டும் என கடந்த 2024ஆம் ஆண்டு உயர்கல்வித்துறை செய லாளருக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அமல்படுத்தவில்லை.’ என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவுக்கு பின் பணி நிய மனம் வழங்காமல் இருந்த ஐஏஎஸ் அதி காரிக்கு கருணை காட்ட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கறாராக தெரி வித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அரசு தரப்பு வழக்கறிஞர், அடுத்த விசாரணைக் குள் அரசிடம் இருந்து பதிலை பெற்று தரு வதாக உறுதி அளித்ததை அடுத்து, நீதி பதி வழக்கை ஒத்திவைத்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரை யன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தற்போது உயர் கல்வி செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபால் இல்லை. வேறு ஒரு அதிகாரி’ என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வி.கார்த்திகேயன், ‘வழக்கு தொடரப்பட்டபோது இவர்தான் செயலாளராக இருந்தார்’ என்றார். இதை யடுத்து,’ஐ.ஏ.எஸ் அதிகாரி பொய் சொல்ல லாமா? வழக்கு தொடரும்போது அவர்தான் அந்த பதவியை வகித்துள்ளார். அதனால், ஓராண்டு ஆகியும் உத்தரவை அமல்படுத்தாமல் இருந்துள்ளார். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட போகிறேன்’ என்று நீதிபதி காட்டமாக கூறினார்.