“ஆபரேஷன் சிந்தூரில்’ பங்கேற்ற வீரர்களின் தியாகத்தை கெளரவிக்கும் வகையில் “வாரியர் யோகாசனம்”
கும்பகோணத்தில் 500 மாணவர்கள் பங்கேற்பு
கும்பகோணம், மே 31- திருச்சி தேசிய மாணவர் படை(NCC) தலைமையின் கீழ், 8 ஆம் தமிழ்நாடு பட்டாலியன், அன்னை இயற்கை மற்றும் யோகா கல்லூரி இணைந்து, கும்பகோணத்தில் மெகா யோகா நிகழ்வு உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. திருச்சி தேசிய மாணவர் படை தலைமை அலுவலகத்திற்குட்பட்ட 8 ஆம் தமிழ்நாடு பட்டாலியன், அன்னை இயற்கை மற்றும் யோகா கல்லூரியுடன் இணைந்து, கும்பகோணத்தின் புகழ்பெற்ற மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை, ஒரே நேரத்தில் ஒண்றிணைந்து ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களின் தியாகத்தை கெளரவிக்கும் வகையில் “வாரியர் யோகாசனம்”, பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் “பட்டர்பிளை யோகாசனம்”, மாணவ சமுதாய முன்னேற்றத்திற்காக, “பத்மாசனம்” ஆகிய மூன்று யோகாசனங்களுடன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இந்நிகழ்வு உலக சாதனைக்கான பரிந்துரைக்கு தகுதியான நிகழ்வாக அமைந்தது. கர்னல் விஜயகுமார், திருச்சி மண்டல மலைக்கோட்டை தேசிய மாணவர் படை தலைமை அதிகாரி, மாணவர்களை பாராட்டினார். 8 ஆம் பட்டாலியன் படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சசிதரன், 4 ஆம் பட்டாலியன் படை அதிகாரி மேஜர் மினி ஆகியோர் தலைமை வகித்தனர். அன்னை கல்வி குழும தலைவர் அன்வர் கபீர், செயல் அலுவலர் ராஜ்குமார், அன்னை இயற்கை மற்றும் யோகா கல்லூரி முதல்வர் மருத்துவர் கார்த்திகா, நிர்வாக அதிகாரி திருமூலன் நிகழ்வின் வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கினர். லெப்டினன்ட் ரமேஷ்பாபு (தே.மா.ப.) மற்றும் சுபேதார் மேஜர் பாலச்சந்திரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த யோகா நிகழ்வு, மாணவர்களின் ஆரோக்கியம், ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்று ஆகிய பண்புகளை வளர்த்தெடுக்க ஒரு முக்கிய வாய்ப்பாக இருந்தது.