டமாஸ்கஸ், ஜன.20- சிரியாவில் திருடப்பட்ட கச்சா எண்ணெய் பீப்பாய், பீப்பாயாக வடக்கு இராக்கில் உள்ள தங்கள் முகாம்களுக்கு அமெரிக்க ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. இந்தச் செய்தியை சிரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவ னமான சனா தெரிவித்துள்ளது. 111 வண்டிகள் அடங்கிய ராணு வக்குழு இதை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சிரியாவின் வடகிழக்கு மாகாணமான ஹசாகாவில் உள்ள அல் வாலீத் என்ற பகுதி வழி யாக இந்த வண்டிகள் சென்றன. இந்த எல்லைவழி சட்டவிரோதமான தாகும். இந்த 111 வண்டிகளுக்குப் பாதுகாப்பாக ஆயுதந்தாங்கிய ஆறு அமெரிக்க ராணுவ வண்டிகள் உடனிருந்தன. சிரியாவிலிருந்து எண்ணெய் வளத்தைக் கொள்ளையடித்து கடத்திச் செல்வது அமெரிக்க ராணுவத்தின் வாடிக்கையான நடவ டிக்கையாக மாறிவிட்டது. புத்தாண்டு பிறந்த ஓரிரு நாட்களிலேயே முதல் கடத்தல் நடந்தது.
அப்போது 128 வாகனங்களில் கச்சா எண்ணெய் கடத்திச் செல்லப்பட்டது. இராக்கில் உள்ள தங்கள் தளங்களை கடத்திச் செல்லப்பட்ட எண்ணெய்யை விநியோகம் செய்யப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை வரவிடாமல் பார்த்துக் கொள்ளவே சிரியாவிற்குள் தங்கள் தளங்களை அமைத்தி ருக்கிறோம் என்று அமெரிக்கா கூறிக் கொள்கிறது. அத்தகைய தளங்களுக்கு சிரியாவின் அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட வில்லை. பயங்கரவாதிகள் எண்ணெய் வளத்தைக் கொள்ளை யடித்து விடுவார்கள் என்று சொல்லிக் கொண்டு, அமெரிக்க ராணுவமே கொள்ளைக்கூட்டமாக மாறியிருக்கிறது.
தங்கள் வளங்களைக் கொள்ளையடிக்கவே அமெரிக்க ராணு வம் சிரியாவின் மண்ணில் முகாமிட்டிருக்கிறது என்று சிரிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் தாங்கள் இருப்பது அந்நாட்டில் உள்ள எண்ணெய் வளத்திற்காகத்தான் என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒப்புதல் வாக்குமூலம் ஏற் கனவே அளித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய ஜனாதி பதி பஷர் அல் அஸ்ஸாத்தை பதவியிலிருந்து அகற்ற பல முயற்சிகள் மேற்கொண்டும் பலிக்காததால், பொருளாதார ரீதியான போரை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளதாக சிரிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.