tamilnadu

img

ஈரோடு தமிழன்பனுக்கு ‘மகாகவி’ பட்டம்

கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழில் கவிதைகளை அளித்துவருபவர் ஈரோடுதமிழன்பன் . நான்காம் தமிழ்ச் சங்கம் என அறியப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கரந்தைத் தமிழ்க்கல்லூரியின் மாணவர். பாரதிதாசனின் பேரன்பை முழுமையாக பெற்ற ஈரோடு தமிழன்பன் கவிதை , உரைநடை, மொழிபெயர்ப்பு, உரைவீச்சு,ஆகியவற்றில் திறன்மிக்க பல்கலை வித்தகர் . 102 நூல்கள் எழுதியவர். இவற்றுள் 79 கவிதை நூல்களும் 3 மொழியாக்க நூல்களும்  அடங்கும். இன்னமும் எழுதிக்கொண்டு உள்ளவர். தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த கவிதை நூல்களுக்கான தமிழக அரசின் விருது,தமிழக அரசின் பாரதிதாசன் விருது,தமிழக அரசின் குறள்பீட விருது, ஒன்றிய அரசின் சாகித்யஅகாதெமி விருது,கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தமிழவேள் உமாமகேசுவரனார் விருது முரசொலிஅறக்கட்டளையின் கலைஞர் விருது, பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் அளித்த பல்வகைவிருதுகள், திராவிடர் கழகம் வழங்கிய பெரியார் விருது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கியசெம்மொழி ஞாயிறு விருது, எஸ். ஆர் .எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் வழங்கிய பரிதிமாற்கலைஞர் விருது, தினத்தந்தி வழங்கிய  மூத்த தமிழறிஞருக்கான வாழ்நாள் சாதனையாளர்விருது ,தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்- விற்பனையாளர் சங்கம் வழங்கிய கலைஞர் பொற்கிழி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய கலைஞர் செம்மொழி விருது, போன்றவிருதுகளைத் தாயகத்தில் பெற்றவர். கனடா , டொரெண்டோ பல்கலைக்கழக நாவலர்நெடுஞ்செழியன் தகைசால் தமிழ் அறிஞர் விருது,வட அமெரிக்க மெட்ரோபிளக்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்கிய மகாகவி விருது போன்ற  அயலக விருதுகள் பெற்றவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் முதன்முறையாக ஈரோடு தமிழன்பன் படைப்புகள் மீதானஇருநாள் தேசியக் கருத்தரங்கம் நடத்தியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் திங்கள்தோறும் ஈரோடு தமிழன்பன்88 எனும் ஓர் உரைவீச்சுத் தொடரை செப்டம்பர் 2021 முதல் தொடர்ந்து நடத்திவருகிறது. மேலும் உலக அளவில் ஆண்டுதோறும் தமிழ்மொழியில் சிறந்து விளங்கும்படைப்பாளியைச் சிறப்பித்திட கனடா அமெரிக்காவின் 60 தமிழ்ச்சங்களின் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை திட்டமிட்டு உலகத் தமிழ்ப்பீட விருது என ஒரு விருதை ஈரோடு தமிழன்பனுக்கு அளித்திட முடிவு செய்து அறிவித்துள்ளது. நியுயார்க்கில்  சூலை 2022 ல் இவ்விருது அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் உலக அளவில் ஓர் உயர் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளஅடிப்படையில் 1931ல் அமைக்கப்பட்ட, நான்காம் தமிழ்ச்சங்கம் என அறியப்பட்டுள்ள, கரந்தைத் தமிழ்ச் சங்கமும் தீர்மானம் இயற்றி கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் மாணவர்ஈரோடு தமிழன்பனுக்கு தமிழகத்தின்   மகாகவி பட்டத்தை வழங்கியுள்ளது. இதுவரை கரந்தைத்தமிழ்ச் சங்கம் பேரா.இரா. வேங்கடாசலம் பிள்ளை அவர்களுக்கு கவியரசு பட்டமும் தமிழவேள் உமாமகேசுவரனார் பெயரில் விருதுகளை தமிழ்த்திரு இராம நாதனார், பாலசுந்தரனார், ஈரோடுதமிழன்பனார், சிவமணியார் ஆகியோருக்கும் அளித்துள்ளது.

கரந்தையின் தமிழ்ப்பொழில் இதழின்ஆசிரியர் குழுவிலும் ஈரோடு தமிழன்பனை சேர்த்துள்ளது கரந்தைத் தமிழ்ச் சங்கம் . தமிழில்பாரதிக்குப் பிறகு தமிழகத்தில் 1932ல்  சென்னைப் பல்கலைக்கழகம் மலையாளக் கவிஞர் குமாரன்ஆசானுக்கு மகாகவி பட்டம் வழங்கியது.இப்போது ஈரோடு தமிழன்பனுக்கு மகாகவி பட்டம்அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.