‘பாஜகவின் கைப்பாவை தேர்தல் ஆணையம்’
சென்னை: “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக 140 கோடி மக்கள் தொகையை கொண்டு, 97 கோடி பதிவு செய்யப் பட்ட வாக்காளர்களில், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்திருக்கிறார்கள். 1952 மக்களவைத் தேர்தல் முதற்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் மீதிருந்த நம்பிக்கை சமீப காலங்களில் சிதைந்து வருகிறது. பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் யாரை நியமிக்க விரும்பு கிறாரோ, அவரை நியமித்துதான் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்படி நியமிக்கப்பட்டவர்கள் பாஜகவின் கைப் பாவையாக செயல்பட்டு வருவது இந்திய ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்” என்று தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியு உள்ளார்.
வழக்கறிஞர் பாலு நீக்கம்
சென்னை: பாமக-வில் ராமதாஸுக்கும், அன்பு மணிக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. பாமகவில் முக்கிய முகமாக அறியப்பட்ட வழக்கறிஞர் பாலுவை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கி யுள்ளார். மேலும், அந்த கட்சியின் சமூக நீதிப் பேரவை யின் தலைவர் பதவியிலிருந்து பாலுவை நீக்கியுள்ள ராமதாஸ், பாலுவிற்கு பதிலாக வி.எஸ்.கோபு என்ற வழக்கறி ஞரை சமூக நீதிப் பேரவையின் புதிய தலைவராக நியமித்து அறிவித்துள்ளார்.
நீலகிரிக்கு ‘ரெட்’ அலர்ட்
சென்னை: நீலகிரி மாவட்டத்திற்கு ஜூன் 14, 15 ஆம் தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூன் 15 அன்று கோவை, நெல்லை, கன்னியா குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதி கள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தோனிக்கு வாழ்த்து
சென்னை: ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்து விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருக் கும் கிரிக்கெட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஐசிசியின் ‘ஹால் ஆப் பேம்’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெரும் தோனிக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக் கிறார்.
அமைச்சர் வழக்கிலிருந்து விடுவிப்பு
சென்னை: கடந்த 2011 ஆம் ஆண்டு செய்யாறு பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தியதாக திருவண்ணாமலை மாவட்ட குற்றவி யல் நடுவர் நீதிமன்றத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நடத்தை விதிகள் தொடர்பாக அரசு தரப்பில் முறையாக சாட்சி யங்கள் நிரூபிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோருக்கு அனுமதி மறுப்பு
சென்னை: தாம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலி யல் வன்கொடுமை நடந்தது. இதன் எதிரொலியாக, சம்பந்தப் பட்ட அரசு சேவை இல்லத்தில் மற்ற குழந்தைகளை பார்க்க விழுப்புரம், பண்ருட்டி, திருப்பெரும்பதூர் உள்ளிட்ட பகுதி களில் வந்த பெற்றோருக்கு அனுமதி மறுத்ததால் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
இராமநாதபுரம்: தனுஷ்கோடியில் இருந்து பாம்பன் வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் என மீன்வளத்துறை அறி வுறுத்தி உள்ளது. தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்றும், கடற்கரை முழுவதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவி உள்ளதால் மீன் பிடிக்க வேண்டாம் என்றும் அறி வுரை வழங்கப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறை
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக உணவு டெலி வரி செய்யும் ஊழியர்களுக் காக ஏசி ஓய்வறையை பயன் பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்தது. இதையடுத்து, கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் கொண்ட ஏசி ஓய்வறை, சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை அடிப்படையில் அண்ணா நகர், கே.கே.நகரில் விரைவில் திறக்கப்படவுள்ளது.