பெண்கள் மேம்பாட்டுத் துறை’ அமைக்க பரிந்துரை
’ண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முக்கிய கேள்வியை எழுப்பினார். பணியிடத்தில் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் குறித்து மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அறிக்கை சமர்ப்பித்தார். இதுவரை 36,000 அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள் புகார்கள் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இணையதளத்தில் 746 புகார்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார். நீதிபதி மஞ்சுளா, அரசுப் பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வின் போது பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். மேலும், “பெண்கள் முன்னேற்றத்திற்காக சமூக நலத்துறையில் இருந்து பிரித்து பெண்கள் மேம்பாட்டு துறை என தனி துறையை தமிழ்நாடு அரசு ஏன் உருவாக்கக் கூடாது?” என்று கேள்வி எழுப்பி னார். தலைமை வழக்கறிஞர், இது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் எனவும், நீதிமன்றத்தின் பரிந்துரைகளில் எவற்றை அமல்படுத்த முடியும் என்பதை அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும் எனவும் பதி லளித்தார். நீதிபதி, “பெண்கள் மேம்பாட்டு துறை உருவாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் மாநில தலைமை குற்ற வியல் வழக்கறிஞர் கலந்து ஆலோசிக்க வேண்டும்” என்று கூறி, வழக்கை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.