tamilnadu

img

காஷ்மீரைச் சிதைத்து எதைச் சாதித்தீர்கள்?

சென்னை, ஏப்.13- ஜம்மு-காஷ்மீரை சிதை த்து இதுவரை எதைச் சாதித் தீர்கள் என்று ஒன்றிய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஜம்மு-காஷ்மீர் மாநில மூத்த தலை வரும், மத்தியக்குழு உறுப் பினருமான முகமது யூசுப் தாரிகாமி கேள்விக்கணை தொடுத்தார். இந்திய மக்களின் ஒற்று மையை சீர்குலைக்கும் விதத் தில் மோடி அரசு ஆதரவோடு வெளியாகியுள்ள  காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் விதைக்கும் வெறுப்பு அர சியலுக்கு எதிராக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் செவ்வாயன்று மாலை சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. இக்கருத்தரங்கில் பங்கேற்று தாரிகாமி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீரின் எதிர்காலம் குறித்தும் சிந்தித்துத்தான் அரசியல் சாசனத்தில் அம்மாநிலத்திற்கு என்று சில பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அரசியல் சாசனத்தை உரு வாக்கியவர்கள் தொலை நோக்கு பார்வை கொண்டு அத்தகைய பிரிவுகளை சேர்த்தனர். தீவிரவாத தாக்கு தல்களால் 1990 களில் காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் இடம்  பெயர்ந்ததை அடிப்படை யாகக் கொண்டு தற்போது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’  திரைப்படம் எடுக்கப் பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்தப்படம் பல உண்மைகளை மறைக் கிறது. சில சம்பவங்களை மிகைப்படுத்துகிறது. தீவிர வாதிகளுக்கு மதம், நாடு எல்லை கிடையாது; ஜம்மு-  காஷ்மீரில் காஷ்மீரி முஸ் லிம்களைப் போலவே பண்டிட்டுகளும் அச்சுறுத் தல்களை எதிர்கொண்டனர். அவர்கள் இயல்பாகவே பீதியடைந்து வெளியேறினர். இதனால் அவர்கள் மட்டுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக உரு வகப்படுத்தக்கூடாது.  தற் போது காஷ்மீரில் மக்கள் படும் துயரங்களை நாட்டு மக்கள் முன்பு  முன்னிறுத்த வேண்டிய அவசியம்  ஏற் பட்டுள்ளது. 

பண்டிட்டுகளுக்கு மோடி அரசு என்ன செய்தது?

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற கற்பனையுடன் கூடிய சம்பவங்களை; மிகைப் படுத்தப்பட்ட திரைப்படங் களை ஒன்றிய அரசே  ஊக்குவிப்பதன் மூலம், இரு துருவ நிலைமையை உருவாக்க முயற்சிக்கிறது. ஒரு தரப்பு மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரிக்க முயற்சிக்கிறார்கள்.  காஷ்மீர் பண்டிட்டு களின் துயரம் குறித்து பேசும் ஆட்சியாளர்கள் மத்தியில் 2014ஆம் ஆண்டு  ஆட்சிக்கு வந்ததில் இருந்து பண்டிட்டுகளுக்கு என்ன செய்தார்கள்? வினை - எதிர்வினை என்பது  ஒரு சுழற்சி போன்றது. அது, காஷ்மீர்  பள்ளத்தாக்கில் கோபத்தையும் வெறுப்பையும் மட்டுமே பரப்பி மக்களிடத்தில் நிலவும் நல்லிணக்கத்திற்கான சூழலை நாசமாக்கிவிடும். அக்னிஹோத்ரியின் இந்தத் திரைப்படம் காஷ்மீர் பண்டிட்டுகள்மீது அனுதாபத்தை உருவாக்குவதற்கு பதில் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வை இந்துக்களிடம் ஏற்படுத்துகிறது. காஷ்மீர் பண்டிட்டுக் களுக்கு ஒன்றிய அரசு ஏன் நல்லது செய்யக்கூடாது? அவர்களின் வலியை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டுமா அல்லது அதை சந்தைப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டுமா? மக்களின் கண்ணீரில்  சாம்ராஜ்ஜியங்களை உருவாக்காதீர்கள். 

‘என்ன சாதித்துவிட்டீர்கள்?

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநாட்டுவோம் என்ற போர்வையில் அரசியல் எதிரிகளை பாஜக அரசு தொடர்ந்து மிரட்டி வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தனது எதிரி களின் அரசியல் செயல்பாடுகளை முடக்க  பல ஏஜென்சி களைப் பயன்படுத்துகிறது. முன்னாள் முதல்வர் ஒமர் அப்து ல்லாவுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது. இதேபோன்று பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தியின் (முன்னாள் முதல்வர்கள்) தாய் குல்ஷன் நசீர் மற்றும் பல தலைவர்களும் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இப்படித்தான் ஒன்றிய அரசு காஷ்மீரில்  அமைதியை நிலை நாட்டப் போகிறதா?  அதே போல் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கும் போது ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு கூடிய விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அரசு  உறுதியளித்தது.  ஆனால் நடத்தவில்லை. அம்மாநிலத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களை ஒன்றிய அரசு தொடர்ந்து இழிவுபடுத்துகிறது. இதற்கு முன்பு பரூக் அப்துல்லா மற்றும் மறைந்த முப்தி முகமது சயீத்தின் நோய்வாய்ப்பட்ட மனைவியிடம் மத்திய ஏஜென்சிகள் விசாரணை நடத்தின. ஆனால் இதில் ஒன்றிய ஆட்சியாளர்கள் எதைச் சாதித்தார்கள்?  எனவே காஷ்மீரில்  ஜனநாயகச் செயல்பாடுகளை காப்பாற்ற   நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள்  முன்வரவேண்டும். தயவுசெய்து எங்களை தனித்துப் பார்க்காதீர்கள்.  காஷ்மீர் ஏன் தனிமைப்படுத்தப்படுகிறது? காஷ்மீரிகளை தொடர்ந்து ஆட்சியாளர்கள் அடக்க  முயற்சிப்பது ஏன்?  எங்கள்  மக்கள் மீது  நம்பிக்கை யில்லையா?  என்ற கேள்விகளை ஆட்சியாளர்களை நோக்கி  எழுப்புகிறோம்.

‘சட்ட விரோதச்’ சட்டம் இன்றும் ஏன்?

வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்பியுள்ளது எனக்கூறி சட்டவிரோத தடுப்பு காவல் சட்டம் சில இடங்களில் திரும்பப்பெறப்பட்டுள்ளது. காஷ்மீரில் தீவிர வாதம் குறைந்துவிட்டது,  அமைதியே நிலவுகிறது என்று  கூறும் ஒன்றிய  அரசு அதே சட்டத்தை திரும்பப்பெறாமல் தொடர்ந்து  அமல்படுத்துவது ஏன்?  நான் இந்த கூட்டத்தில் வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒரு அரசியல் கட்சித்தலை வரின் உணர்வுகள் அல்ல; காஷ்மீர் மக்களின் உணர்வுகள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். காஷ்மீர் மக்களுக்கு நாட்டின் பிறபகுதிகளில் இருந்து  வரும் ஆதரவும் அன்பும் எங்களை மேலும் உத்வேகமூட்டும். காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தை மேலும் வலுவாக நடத்த உதவும். மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை போன்றவை வெறும் வார்த்தைகள் அல்ல. அதுதான் இந்தியாவின் பலம். நாம் எதிர்காலத்திலும் ஒற்றுமையுடன் இருக்கப்போகிறோமா; இல்லையா என்பதை மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை பாதுகாக்கப்படுவதில் தான் உள்ளது. 

ஒன்று சேருங்கள்

நாட்டின் எதிர்காலம் மீது அக்கறை கொண்ட அனைவரும் ஒன்று சேருங்கள்.  நம்மை அடக்க முயற்சிப்பவர்களை, நம்மக்களின் ஒற்றுமையை பிரிக்க முயற்சிப்பவர்களை, நமக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டிருப்பவர்களை தோற்கடிப்போம். இது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது.  பகத்சிங், ராஜ்குரு,சுகதேவ் போன்ற எண்ணற்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தில் உருவான இந்தியாவையும் இந்திய மக்களின் ஒற்றுமை உணர்வையும் பாதுகாப்போம்.  இவ்வாறு யூசுப் தாரிகாமி பேசினார். 

திரைப்படத்தில் நுண் அரசியல்

இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர்  உ.வாசுகி பேசுகையில், “முதலாளித்துவத்திற்கு எதிராக, தொழிலாளர்களின் கவசமாக உள்ள தொழிற்சங்கங்களை, அதன் தலைவர்களை இழிவுபடுத்துவது, ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துவது, திருநர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை இழிவு செய்வது, சாதிய நாட்டாமைகளை முன்னிலைப்படுத்துவது, இஸ்லாமியர்களை கடத்தல்கா ரர்களாகவும், தேசவிரோதிகளாகவும் சித்தரிப்பது போன்ற நுண் அரசியலை திரைப்படங்கள் சாதுர்யமாகசெய்கின்றன. உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு நேர் எதிராக ‘காஷ்மீர் பைல்ஸ்’  வந்துள்ளது. பல உண்மைகளை மறைத்து, சில பொய்களை இணைத்து, திருகல்களோடு, வெறுப்பரசியலை நியாயப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் எனும் பெருங்கடலில் ஒரு சிறு புள்ளிதான் இந்த திரைப்படம்” என்றார்.

கருத்தியல் தளத்திலும் தேவை போராட்டம்

“ராமநவமிக்கு கோவிலுக்கு செல்லாமல் மசூதிக்கு செல்வதிலிருந்தே அவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள  முடிகிறது. பொருளாதார பிரச்சனை, விவசாயிகளின் வர்க்கப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் இவற்றையெல்லாம் மீறி  உ.பி.யில் பாஜக வென்றிருக்கிறது. இந்துத்துவா கருத்தியல் ஒரு பகுதி மக்களின் உணர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தேர்தல் களத்தில் மட்டுமின்றி, கருத்தியல் தளத்திலும் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

கேள்வி கேட்போம்!

ஊடகவியலாளர் ஜென்ராம் குறிப்பிடுகையில், சங்பரிவாரத்தை வீழ்த்த பாஜக அல்லாத அனைத்து கட்சி களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றார்.  பொய்களால் உருவாகும் பொருளாதார, அரசியல், ராணுவ விளைவுகளில் இருந்து மக்கள் தெளிவடைவதற்குள் முடிந்தளவு அறுவடை செய்துவிடுகிறார்கள்; எதிர்க்கேள்வியே கேட்கக் கூடாது என்ற உளவியலை வெறுப்பரசியல் மூலம் உருவாக்கி வைத்துள்ளனர். பாஜக-வை அரசியல் ரீதியாக வீழ்த்தினால் கூட, அது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை சரி செய்வது சாதாரணமானதல்ல” என்றார். நிகழ்வில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப் பாளர் க.உதயகுமார், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், சென்னை மக்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார் உள்ளிட்டோர் பேசினர்.