tamilnadu

img

தேசிய அளவிலான தேர்வுகளை 22 அலுவல் மொழிகளிலும் நடத்த வேண்டும்

சென்னை, ஏப். 12 - தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 22 அலுவல் மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மத்திய ஆயுதப் போலீஸ் படை (சிஆர்பிஎப்) தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்து ள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதனன்று (ஏப்.12) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன்,  ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎப்) 9 ஆயிரத்து 212 பணி யிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் நடைபெற உள்ள இந்த தேர்வு, தமிழ்நாட்டில் 12 மையங் களில் நடக்கிறது. இந்த தேர்வு வாயி லாக தமிழ்நாட்டில் இருந்து 579 பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்துவது, இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு சம வாய்ப்பை மறுக்கும் செயலாகும்.  அரசியல் அமைப்பு சட்டம் அட்டவணை 8ல் அங்கீகரிக்கப்பட்ட 22 அலுவல் மொழிகளிலும் ஒன்றிய அரசு தேர்வுகளை நடத்த வேண்டும் என்றார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர்  எல்.பி.சரவணத் தமிழன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், சென்னை மாவட்ட நிர்வாகிகள் தீ.சந்துரு, எம். ஆர்.சுரேஷ்,  நித்தியராஜ், அ.ஜானகி தேவி, அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.