tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இளம் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

சென்னை, ஏப். 17- திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தி இளம் பெண்ணை வற்புறுத்திய வாலிபரை கைது செய்து சிறை யில் அடைத்தனர். சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண், விஷால் (எ) யோகேஸ்வரன்(22) என்பவரை காதலித்து வந்துள்ளார். அதன்பிறகு காதலனுக்கு கஞ்சா பழக்கம் இருப்பது தெரிய வந்ததும் அவரிடம் இருந்து  விலக ஆரம் பித்துள்ளார். ஆனால் யோகேஸ்வரன் அடிக்கடி பின்தொடர்ந்து சென்று அவரைதிருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப் படுத்தியிருக்கிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் இளம் பெண்ணை வழிமறித்து, என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உனது முகத்தில் ஆசிட் ஊற்றி  விடுவேன், எனது மரணத்திற்கு காரணம் நீ தான் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன்  என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்பெண் அயனாவரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை யினர் விசாரணை நடத்தி, துரைப்பாக்கம் ஒக்கியம்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த விஷால் கைது செய்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடனை தராததால் கார் ஏற்றி எலக்ட்ரீசியன் படுகொலை

சென்னை, ஏப்.17-  வீடு கட்ட ரூ.5 லட்சம் கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்த எலக்ட்ரீசியன் கார் ஏற்றி படு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தப்பி ஓடிய உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுராந்தகம் அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்பாபு (45), எலக்ட்ரீசியன். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (30), ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்நிலையில், சரத்பாபு 2021ம்  ஆண்டு வீடு கட்டுவதற்காக தனது உறவினரான சிவராஜி டம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார்.  பின்னர் வாங்கிய பணத்தை சரத்பாபுவிடம் சிவராஜ் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால், சரத்பாபு பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் இரு வருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சிவராஜ் தனது காரில் செவ்வாயன்று  இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் சரத்பாபு தனது நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை சிவராஜ் பார்த்து  காரை படுவேகமாக ஓட்டிச் சென்று சரத்பாபு மீது  பயங்கரமாக மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சரத்பாபு உயிரிழந்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரட்டை கொலை வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள்: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

செல்போனை பிடுங்கி விளையாடிய போது ஏற்பட்ட பகையால் இளைஞர்களை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. சென்னை திருவான்மியூரை சேர்ந்த தினேஷ் (24), அதே பகுதியில் உள்ள குமார்  என்பவரின் தாயாரின் 16ம் நாள் துக்க நிகழ்ச்சி யில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சி யில் பங்கேற்ற வசந்தகுமார் என்பவரின் செல்போனை பிடுங்கி தினேஷ் விளையாடி உள்ளார். இதை தொடர்ந்து செல்போனை தினேஷிடம் இருந்து பிடுங்கி அருண் குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கொடுத்து ள்ளனர். அப்போது தினேஷ் மற்றும் அருண் குமார், சதீஷ்குமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2022 ஏப்ரல் 30ம் தேதி இரவு சதீஷ் குமார் மற்றும் அருண் குமார் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு  சென்று தினேஷ் கத்தியால் வயிற்றில் குத்தி யுள்ளார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அருண்குமார், சதீஷ் குமார் இருவரும் இறந்துவிட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தினேஷ் மீது திருவான்மியூர் காவல் நிலை யத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கு சென்னை 17வது கூடு தல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தோத்தி ராமையா முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜே.சரவணன் ஆஜராகி, தினே சுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். தினேஷ் தரப் பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றச்சாட்டு களை மறுத்து வாதிட்டார். வழக்கை விசா ரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதா ரங்கள், சாட்சிகளுடன் சந்தேகத்திற்கு இட மின்றி நிரூபிக்கப்பட்டதால் தினேசுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.